10/03/2022
“அஸ்ஸிறாத்”
அஷ்அரிய்யஹ்களின் பொக்கிஷம்
அல்லாமஹ்,அல்ஹாபிழ் அப்துழ்ழாஹ் அல் ஹறரீ றஹிமஹுழ்ழாஹ் அவர்களினால் அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினரின் கொள்கையை பாதுகாக்கும் விடயத்தில் தொகுத்த நூற்றுக்கணக்கான நூற்களில் இந்நூல் மிக முக்கியமானதாகும்.
மேலும் கொள்கை ரீதியாக முன்வைக்கப்படும் பல கேள்விகளுக்கு இந்நூல் தக்க பதில்களை உள்ளடக்கி இருப்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். நம் நாடு உட்பட பல நாடுகளிலில் உள்ள அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினரின் கல்லூரிகளில் இந்நூல் பாடத்திட்ட நூலாக இணைக்கப்பட்டு போதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அஷ்அரிய்யஹ்களின் கொள்கை கோட்பாடுகளை ஆதாரங்களை பிரதானப்படுத்தி, தற்காலத்தில் எதிர்கொள்ளப்படும் அகீதஹ் தொடர்பான பல சவாலான மஸ்அலாக்களுக்கு தரமான தீர்வுகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட நூற்களில் இந்த நூலுக்கு தனிச் சிறப்புண்டு.
அழ்ழாஹ்வின் ஸிபாத்கள் (பண்புகள்) எவ்வாறு நம்பிக்கை கொள்ளப்பட வேண்டும், முதஷாபிஹான வசனங்கள் எவ்வாறு கையாளப்படவேண்டும், முக்கிய சில முதஷாபிஹான வசனங்களை ஸலபுகள், ஹலபுகள் கையாண்ட விதம்,
தஃவீல் என்றால் என்ன தஃவீல் தப்ஸீலீ, தஃவீல் இஜ்மாலீ என்றால் என்ன? தஃவீல் செய்ய அனுமதியுண்டா?, தஃவீல் செய்வதை மறுப்போருக்கு எதிராக முன்வைக்க வேண்டிய கேள்விகள், அணுகுமுறைகள், பிழையான முறையில் தஃவீல் செய்து அகீதாவுக்கெதிரான கருத்துகளை நம்பியிருப்போர் தொடர்பான தீர்ப்பு, அழ்ழாஹ் அனைத்து இடத்திலுமோ, அர்ஷிலோ, வானத்திலோ தரிபடுபவன் அல்ல. அவன் இடமோ, திசையோ இன்றி உள்ளவன் என்பதை குர்ஆன், சுன்னஹ் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் நிறுவும் முறை, குப்ரை ஏற்படுத்தும் காரியங்கள் என்னென்ன?
வஹ்ஹாபிகள், முஃதஸிலாக்கள் போன்ற பித்அத்வாதிகளின் வழிகேடுகளை முறியடிப்பது எவ்வாறு? அழ்ழாஹ்வின் கலாம் (பேச்சு) தொடர்பான தெளிவு, அது தொடர்பான சரியான நம்பிக்கை போன்ற இன்னும் பல மஸ்அலாக்களை அஷ்அரிய்யஹ்களின் போங்கில் தெளிவுபடுத்தும் தனித்துவம் வாய்ந்த ஒரு நூல்.
இந்த"அஸ் ஸிறாத்"பாகம் 01 தற்போது தமிழ் மொழியில் வெளிவரவுள்ளது.
ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் அனுசரனையில் இமாம் அல் அஷ்அரீ கலாபீடம் இந்நூலை வெளியிடவுள்ளது.