13/01/2026
வீடு வீடாகப் பொருட்கள் விநியோகிக்கும்
ஒரு சிறுவன்…
அவனுக்கு ரொம்ப பசித்தது.
எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால்,
கையில் ஒரு காசும் இல்லை.
அருகிலிருந்த ஒரு வீட்டில்
ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என்று நினைத்து,
அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.
ஒரு பெண் கதவைத் திறந்தாள்.
கேட்க வேண்டும் என்று நினைத்தான்…
ஆனால் கூச்சம்.
வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டன.
தயக்கத்துடன் அவன் கேட்டான், கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?”
அந்தப் பெண்
அவன் கண்களில் இருந்த பசியைக் கண்டுவிட்டாள்.
அமைதியாக உள்ளே சென்று,
ஒரு கப் பால் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன்,
நன்றியுடன் கேட்டான்—
“இது மிகப் பெரிய உதவி, நான் உங்களுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறேன்.... ”
அவள் சிரித்தபடி சொன்னாள்—
“கடனா?
அப்படி ஒன்றும் இல்லை.
அன்பான செயலுக்கு
விலை எதுவும் இல்லைன்னு
என் அம்மா சொல்லியிருக்காங்க.”
“ரொம்ப நன்றி…”
என்று புன்னகையுடன் சொல்லி
அந்தச் சிறுவன் சென்றான்.
ஆண்டுகள் கடந்தன…
அதே சிறுவன்,
கஷ்டப்பட்டு…
முட்டி மோதி…
படிப்பை முடித்து,
மருத்துவம் படித்து,
அந்த நகரிலேயே
மிகப் பெரிய மருத்துவராக மாறினான்.
அந்தச் சமயத்தில்,
அந்தப் பெண்ணுக்கு
ஒரு கொடிய நோய் வந்தது.
அதே மருத்துவர் பணியாற்றிய
மருத்துவமனையிலேயே
அவளும் அனுமதிக்கப்பட்டாள்.
அந்த டாக்டரிடமே
அவளுடைய கேஸ் வந்தது.
மெடிக்கல் ரிப்போர்ட்டில்
அவளுடைய ஊர் பெயரைப் பார்த்ததும்,
அவருக்குள் ஒரு சின்ன மின்னல்…
உடனே வார்டுக்குச் சென்று
அவளைப் பார்த்தார்.
அவள்தான்…
அன்று பசியாற பால் கொடுத்த அந்த தாயுள்ளம்.
அந்த நாளிலிருந்து,
அவள் மீது
முழு கவனமும்,
முழு உழைப்பையும் செலுத்தி
சிகிச்சை அளித்தார்.
நீண்ட சிகிச்சைக்குப் பிறகு
அவள் குணமானாள்.
ஆனால்…
பல லட்சங்கள் செலவானதால்
மருத்துவமனை ஒரு பெரிய பில்லை அனுப்பியது.
“இதை எப்படி கட்டப் போகிறோம்?”
என்று நடுங்கும் கையால்
அந்தப் பெண் பில்லைக் திறந்தாள்.
அந்த பில்லின் கடைசியில்
கையால் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள்—
“இந்த பில்லை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
ஒரு கப் பாலில்
உங்கள் கடன் முழுவதும்
தீர்க்கப்பட்டுவிட்டது.
— இது நான் உங்களுக்கு நன்றி சொல்லும் நேரம்!”
அவளின் கண்களில்
கண்ணீர் துளிகள் மின்னின.
அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல…
அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவர்
DR. HOWARD KELLY (1858–1943) தான்.
📜 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
(குறள் 226)
பொருள்:
வறியவர்களின் பசியைப் போக்குவது தான்,
செல்வம் பெற்ற ஒருவன்
எதிர்காலத்தில் தனக்கே உதவும்
மிகச் சிறந்த முதலீடு.
❤️ கடைசி வரி....
நீ இன்று காட்டும் ஒரு சின்ன அன்பு,
நாளை உனக்கு
ஒரு பெரிய ஆசீர்வாதமாக
திரும்பி வரலாம்.
அன்பை விதையுங்கள்…
நன்றி தானாக விளையும் 🌱