08/12/2020
மூக்குக் கண்ணாடி:
கடலோர கிராமப்புறங்களில் பார்த்தீர்கள் என்றால் சிறுவர்களும், பெரியவர்களும் அதிகமாக மூக்கு கண்ணாடி அணித்திருக்கமாட்டார்கள்...
ஆனால் நகர்ப்புறத்தில் உள்ள ஒரு பள்ளியில் சென்று பாருங்கள் ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 20 க்கும் அதிகமான குழந்தைகள் மூக்கு கண்ணாடி அணிந்திருப்பதை நாம் கண்கூடாகக் பார்க்கமுடியும்...
ஆனால் கடற்கரை கிராமங்களில் உள்ள ஒரு பள்ளியில் சென்று பாருங்கள், ஒரு மாணவரையோ அல்லது ஒரு மாணவியைக் கூட நீங்கள் மூக்கு கண்ணாடியுடன் பார்க்க முடியாது காரணம் உணவுமுறைதான், மீன்தான்...
கடற்கரைக் கிராமங்களில் பெரும்பாலும் வாரத்தில் அதிகமான நாட்கள் கடல் உணவுகளைத் தான் விரும்பி எடுத்துக்கொள்கின்றனர். பிள்ளை பெற்ற தாய்மார்கள் கூட அதிகமாக பால் சுரக்க பிரத்யேகமான மீன் வகைகளையே உண்ணுகின்றனர்...
சிலரோ மீன் குழம்பு இல்லையென்றால் அன்றைக்கு சாப்பாட்டையே வெறுத்துவிடுவார்கள்...
நகரங்களில் வாழ்ப்பவர்களுக்கு கடல் மீன்கள் கிடைத்தாலும் பெரும்பாலும் குளிர்சாதன பெட்டியிலிட்டு குளிரூட்டப்பட்ட மீன்களே கிடைக்கிறது. அன்றே பிடிக்கப்பட்ட மீன்கள் கிடைப்பது கடினம்...
ஆனால் கடற்கரையை ஒட்டியுள்ள சில நகர்ப்புறம் மற்றும் கிராமங்ககளில் உள்ளவர்கள் கூட மீன் உணவுகளை வாங்க முயற்சிப்பதும் இல்லை, புலால் வீசும் என்று தவிர்த்தும் விடுகிறார்கள்..
இயன்றவர்கள் தங்களது குழந்தைகளுக்கு அதிகமாக மீன் உணவுகளை வாங்கித்தந்திடுங்கள், அவர்களுடைய கனவுகளுக்கு துணை நின்றிடுங்கள்....
யு.ப டென்னிஸ் பட்டங்கட்டியார்