13/04/2021
சர்வ ரக்ஷாயந்திரம் எல்லா வீடுகளுக்கும் ஏன் தேவைப்படுகிறது?
பண்டையக் காலங்களில் பெரும் கோவில்களைச் சுற்றித் தெருக்கள் அமைக்கப்பட்டு, நகரம் உருவாக்கப்படும். பொருத்தமான இடங்களில் குளங்கள் வெட்டப்படும். ஏற்கனவே அமைந்துள்ள மலைகளையும், நதிகளையும் அனுசரித்து ஊர் அமைக்கப்படும். கோவில்கள் கட்டப்படுவதற்கான இடங்கள், பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும். ஊரே வாஸ்துபடி இருப்பதால், கட்டப்படும் வீடுகளும் எளிதில் வாஸ்து சாஸ்திரப்படி உருவாகிவிடும்.
இன்றைய நகரங்கள், தொழில் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து உருவாகுபவை.
எந்த இடத்தில் மேம்பாலங்கள் எழும்பும். எந்தெந்த இடங்களில் Transformer -கள் வரும், செல்போன் டவர்கள் யார் விட்டு மாடியில் முளைக்கும் என்று கனிக்க முடியாது.
நம்முடைய வீட்டிற்கு வாஸ்து பார்த்துக் கட்டுவதே, அபார்ட்மெண்ட் யுகத்தில் சிரமம். குறிப்பாக மண்ணின் ருசி, தன்மை உள்ளே புதைந்திருக்கும் பொருட்கள் போன்றவற்றைக் கண்டறிவது தற்காலத்தில் குறைந்து வருகிறது. அப்படியே பக்காவாக வாஸ்து பார்த்து கட்டினாலும், நகரம் ஒவ்வொரு காலகட்டத்திலும், தன்னை வேறு வேறு விதமாகக் கட்டமைத்துக் கொள்கிறது. இதனால் நம் விட்டிற்கு வெளியே எடை கூடக்கூடாத இடத்தில் ஏதாவது வரலாம். பள்ளம் தோணர்டப்படலாம். சாக்கடைக் குழாய்கள் அமைக்கப்படலாம்.
விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு போகும் வேகத்திற்கு, நகரமும் தன்னை ஈடுகொடுக்க வேண்டியுள்ளது.
இவைகள் நம் கைகளுக்கு அப்பாற்பட்டவை. ஏதாவது நாம் செய்வதனால், நாம் இருக்கும் இடத்தில் செய்து கொள்ள வேண்டியது தான்.
விஞ்ஞானம் மாறினாலும், இயற்கை மாறாதது. அதன் சுழற்சி காலாகாலத்துக்கும் ஒரே மாதிரி சீராகத்தான் இருக்கும். செடி வளர்ந்து பூத்துக் காய்த்துத் தான் பழுக்கும்.
இத்தகைய இயற்கையின் சக்தியில் கண்ணுக்குத் தெரியாத தன்மைகளும் பல உள்ளன. அவற்றை வசப்படுத்தி, வாழ்க்கையை மேம்படுத்தும் முறைகளில் ஒன்று தான், யந்திரங்கள்.
விளக்கிற்கு முன்னும், பின்னும் வெளிச்சம் பரவுவதைப் போன்று, சர்வ ரக்ஷாயந்திரம், விட்டிற்கு உள்ளும் வெளியிலும் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கும்.
தனிமனிதன் தாயத்தைக் கட்டிக் கொள்வதைப் போல, வீட்டிற்கான தாயத்து இது.
நவீன வாழ்க்கை முறையால் வந்திருக்கும் சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு பாரம்பரிய வைத்தியத்தில் தீர்வு இருப்பதைப் போன்றது தான், யந்திரங்களின் மகிமையும்.
யூத கணங்களுக்கு அதிபதியான கணேசரின் மகா கணபதி யந்திரமும், எல்லா வாஸ்துக் கோளாறுகளையும் போக்கும் மச்ச வாஸ்துயந்திரமும் சேர்ந்த சர்வ ரக்ஷா யந்திரமும், இந்தக் காலகட்டத்தின் அவசியமான மற்றும் உடனடியான தேவை.
யந்திரத்தைப் பராமரித்தல்
யந்திரத்தை வீட்டிற்குள் மாட்ட வேண்டும். சுத்தபத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
சர்வமுமாக வியாபித்திருக்கும் இயற்கை சக்தியை வசீகரிக்க யந்திர வடிவம் உதவும் போது, அதைப் பராமரிப்பதும் அவசியமாகிறது.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுவார். "பூமிக்குக் கிழே எல்லா இடங்களிலும் நீர் உள்ளது. என்றாலும் கிணறோ, குளமோ வெட்டி அதைப் பயன்படுத்தத் தொடங்கும் போது, பராமரிப்பதும் அவசியம்”” என்று.
யந்திரம், கிணறு போன்றது. வீடுகளுக்குப் பயன்படுவது. ஆலயம், குளம் போன்றது. ஊருக்கே பயன்படுவது.
பராமரிக்கப் பராமரிக்க, கிணறும், குளமும் பயன்படுவதைப் போன்றதே யந்திரங்களும்.
முறையாகப் பராமரித்தால், தலைமுறைகளுக்கும் பலன் தரும்.
யந்திர வழிபாடு
"என்னவோ ஏதோ” என்ற யந்திர வழிபாடு பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.
நம்முடைய மண்ணின் வழிபாட்டு முறையில், புகைக்கு மிகுந்த முக்கியத்துவைம் உண்டு.
கந்தகப் புகைக்குப் பேய் பிசாசுகள் ஓடி விடும். அதனால் தான் சாமி ஊர்வலம் வரும் போது, வெடி வெடிப்பது. நல்ல மகிழ்ச்சியான விழாக்களில், வெடி வெடித்துக் கொண்டாடுவதும், திய ஆவிகளை விரட்டுவதற்காகவே.
காலகதி அடைந்து விட்ட நபர்களை அடக்கம் செய்யப் போகும் போதும், சில இடங்களில் வெடிகள் போடப்படுவதுண்டு.
தூய சக்திகளை, சுகந்தமான வாசனைகள் உற்சாகப்படுத்தும்.
சாம்பிராணி போன்றவை தியதை விரட்டி நல்லதை வரவேற்கும். வெண்கடுகு போட்டு சாம்பிராணி காட்டுவது துர்ஆவிகளை விரட்ட உதவும்.
யந்திரத்திற்கு அன்றாடம், வாசனைப் பத்தி காட்ட வேண்டும். வாரம் ஒருமுறை, வாய்ப்புக் கிடைத்தால் சாம்பிராணி போடலாம்.
*தூபதீபம்” என்று சொல்வார்கள். தூபம் என்பது வாசனைப் புகை. திபம் ஏற்றுவதும் விஷேசமானது.
யந்திரம் தரும் வெற்றிகரமான வாழ்க்கை. அதை படிப்படியாகப் பராமரிப்பதில் நமக்கு ஆர்வத்தையும், அக்கரையையும் தரும் என்பது உறுதி.