Rahmath Book House

Rahmath Book House Islamic Online Book Store
இஸ்லாமிய ஆன்லைன் நூல் விற்?

21/11/2025

கிடைக்குமிடம்
ரஹ்மத் புக் ஹவுஸ்
அங்கப்ப நாயக்கன் தெரு,
ஈத்கா மஸ்ஜித் அருகில்
மண்ணடி சென்னை - 1

https://maps.app.goo.gl/my5ZJL1RLvMcm5fx6

21/11/2025
07/11/2025
தாருல் ஹுதா நிறுவனர் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்கள் ரஹ்மத் புக் ஹவுஸ் வருகை தந்தபோது,மயிலாடுதுறை அப்துல்லாஹ் பப்ளிகே...
06/11/2025

தாருல் ஹுதா நிறுவனர் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்கள் ரஹ்மத் புக் ஹவுஸ் வருகை தந்தபோது,

மயிலாடுதுறை அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா முதல் பாகம் வழங்கினோம்.

நூல் : நானிலத்தின் நன்மாதி நபிகள் நாயகம் ﷺநூலாசிரியர் : பேரறிஞர் சையத் சுலைமான் நத்வீ (ரஹ்)தமிழாக்கம் : மௌலவி, காஞ்சி ஆர...
21/10/2025

நூல் : நானிலத்தின் நன்மாதி நபிகள் நாயகம் ﷺ

நூலாசிரியர் : பேரறிஞர் சையத் சுலைமான் நத்வீ (ரஹ்)

தமிழாக்கம் : மௌலவி, காஞ்சி ஆர். அப்துர் ரவூஃப் பாகவி M.A.,

U. ஹுஸைனுல் ஆபிதீன் M.Com.,

பக்கங்கள் : 416

விலை : ரூ. 350/-

கிடைக்குமிடம்:
ரஹ்மத் புக் ஹவுஸ்
அங்கப்பன் நாயக்கன் தெரு,
(ஈத்கா மஸ்ஜித் அருகில்)
மண்ணடி, சென்னை - 600 001,
WhatsApp No.
096001 25000

21/10/2025

அணிந்துரை.
மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி.

நூல்: பூமான் நபியின் பொன்மொழிக் களஞ்சியம் .
முதல் பாகம். பக்கங்கள்:776.
விலை: 700. ரூபாய்.
வெளியீடு: ரஹீமா பதிப்பகம்.
பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம். PIN: 608502.
தொடர்புக்கு: 8870688698
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நவீன உலகின் விஞ்ஞான பாய்ச்சலுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம்.
இம்மார்க்கத்தின் மூலாதார வேத நூல் இறைவேதமாம் திருக்குர்ஆன். இவ்வேதத்தின் விளக்கமாக, நடமாடும் விரிவுரையாக வாழ்ந்தவர்கள் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியன ஹதீஸ் என்றறியப்படுகின்றன.

காலத்தை வென்று வாழும் திருக்குர்ஆனுக்கு பல விரிவுரைகள் காலத்திற்கேற்ப வந்திருப்பினும்கூட அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வே குர்ஆனின் ஒப்பற்ற விரிவுரையாகத் திகழ்கிறது.

கால ஓட்டத்திற்கு ஏற்ப நவீன விளக்கங்களை வெளிப்படுத்தி வருகின்ற அருள்மறையாம் திருக்குர்ஆனுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் குறிப்புரையும் தந்த அறிஞர் யூசுப் அலி அவர்கள் கூறுகிறார் “குர்ஆனின் சிறந்த விரிவுரை காலம் தான்” என்று. ஒருவகையில் இது உண்மைதான் என்றிருப்பினும் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை விட இன்னொன்று சிறந்த விளக்கமாக இருந்திட இயலாது என்பதே இஸ்லாமிய அறிவுலகம் அடித்துச் சொல்லும் உண்மை.

எனவே தான் ஹதீஸ்களுக்கு சேவையாற்றிட, அவற்றை ஊடுருவல்கள் கலப்படங்கள் திரிபுகள் ஆகியனவற்றிலிருந்து காத்திட ஒவ்வொரு காலத்திலும் அருஞ்சேவை ஆற்றி வருகின்றனர் இஸ்லாமிய பேரறிஞர்கள். இச்சேவையில் தன்னையே உருக்கி ஊற்றியவர்கள் ஏராளம்.

தஃப்சீர் எனும் குர்ஆன் விரிவுரை, ஹதீஸ் எனும் நபிவழித்துறை, ஃபிக்ஹ் எனும் சட்டவியல், தாரீஹ் எனும் வரலாறு, (தனிநபர் வரலாறு- சமூகங்களின் வரலாறு- நகரங்களின் வரலாறு- நாகரிகங்களின் வரலாறு) என பல்வேறு கலைகளிலும் துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அறிஞர்கள் அனைவரும் அதன் மூலமாக பொன்னினும் அரிய மார்க்கமான இஸ்லாத்துக்கும் அதன் மூலாதாரமான திருக்குர்ஆனுக்கும் அதன் விரிவுரையான நபிவழிக்கும் சேவையாற்றுவதையே இலக்காகக் கொண்டு இயங்கி வந்திருக்கின்றனர்.

ஆம். ஒரு விரிவுரையில் களங்கமும் கலப்படமும் சேரும்போது தொடக்கத்திலேயே அது துடைத்தெறியப்படாவிடில் காலப்போக்கில் அது மூலநூலின் மீதே ஐயங்கள் ஏற்படக் காரணமாகிவிடும்.

திருக்குர்ஆன் ஒரு பல்கலை வேதமாக இருப்பதால், அதைக் காத்திடக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் எல்லாக் கலைகளையும் களங்கங்களிலிருந்து காக்கும் கடமையை சுமக்க வேண்டியவர்களாகி விட்டனர்.

அதன் ஒப்பற்ற விரிவுரையான ஹதீஸ்களை கூடுதல் கவனத்தோடு காப்பாற்றுவது இச்சமுதாயத்தின் இயல்பான கடமைகளில் ஒன்றாகி விட்டது. இந்தக் கடமையை ஒவ்வொரு காலத்திலும் அறிஞர் செவ்வெனே செய்துள்ளனர். சிலர் இதற்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளனர்.

இந்நூலாசிரியரும் இத்துறையில் தனது வகிபாகத்தை சரியாக நிறைவேற்றியுள்ளார். அவரின் நோக்கமும் அதுவே. அதை இந்நூலின் முன்னுரையில் முதல் பாராவிலேயே தெள்ளத்தெளிவாக சொல்லிவிடுகின்றார். “ஸஹீஹ் மற்றும் ஹசன் தரத்திலான நபி மொழிகளையெல்லாம் மீளக் கூறாமல் ஒரே தொகுப்பாக திரட்டி தர வேண்டும் என்பதே நோக்கம்” என்று கூறுகிறார்.

இந்நூலை வாசிக்கும் போது அவர் அந்த நோக்கத்தை மிகத் துல்லியமாக சரியாக அடைந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இதற்காக அவர் பெரும் சிரத்தையும் மெனக்கிடலும் செய்திருக்கிறார்.

இந்நூலுக்கு அவர் சூட்டியிருக்கும் துணைப் பெயர் “ஜாமிவுல் மஸானீதி வஸ்ஸுனனில் ஹாதீ லி அக்வமி சுனன்” என்பது. இதன் பொருள்: “நேர்த்திமிக்க நபிவழிகளுக்கு வழிகாட்டும் முஸ்னது மற்றும் சுனன் நூல்களின் தொகுப்பு”.

சுன்னா என்ற சொல்லுக்கு நேர்த்தியான வழி என்பதே பொருள். அப்படி இருக்க மிக நேர்த்தியான சுன்னாவின் தொகுப்பு என்று இந்நூலுக்கு அவர் துணைப் பெயர் சூட்டி இருப்பதன் காரணம் என்னவெனில், “சுன்னா” என்ற நேர்த்திமிக்க பாதையில், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட உண்மைக்கு புறம்பான சில தகவல்களும் கலந்திருப்பதை களைந்து சுன்னாவை நேர்த்தி மிக்க அதன் இயல்புக்கு இந்நூல் கொண்டு செல்வதால் இந்த துணைப் பெயர் பொருத்தமானது தான்.

சுன்னா என்ற அரபுச் சொல்லுக்கு “மகாயீசுல் லுஙா” என்ற நூலில் அறிஞர் இப்னுல் பாரிஸ் அவர்கள் தரும் விளக்கம் என்னவெனில்,
“சீன், நூன் ஆகிய ஈரெழுத்துகளால் உருவாகும் சொல் எளிதாய் செல்வதை குறிக்கும். நீரோட்டம் எளிதாய் அமைந்திருப்பதற்கு இச்சொல்லை அரபுகள் பயன்படுத்துவர். (“சன்னல் மாவு” = நீர் எளிதாக ஓடியது என்பது போல). தெள்ளத் தெளிவான, நேரான, தொலைவிலும் மறைவின்றித் தெரிகின்ற, நடக்க எளிதான பாதையே சுன்னா எனப்படும். கரடு முரடான, மேடு பள்ளமான, குப்பை கூளங்கள் கிடக்கின்ற, அசுத்தமான பாதையை சுன்னா என்று சொல்ல இயலாது, சொல்லக்கூடாது. எந்த பாதையில் போனால் இலக்கை அடைய இயலாதோ அதுவும் சுன்னா அல்ல. எந்தப் பாதை நடக்கச் சிரமமானதோ அதுவும் சுன்னா அல்ல.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய சுன்னா என்ற பாதை நடக்க எளிதானது, கரடுமுரடானதல்ல. தூய்மையானது, குப்பை கூளங்களற்றது. நேரானது, கரடு முரடற்றது.

ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலேயே அந்தப் பாதையில் விரும்பத் தகாத சேதங்களை ஏற்படுத்த சிலர் முயன்றனர். அதன் செம்மையை சீர்குலைக்க நினைத்தனர். அந்தப் பாதையில் மனிதக் கருத்து எனும் கழிவுகளை அள்ளிப் போட முயன்றனர். இவ்வாறு சுன்னாவை களங்கப்படுத்த முனைவோரின் புகலிடம் நரகமே என்று எச்சரிக்கின்றன நபிமொழிகள்.

அந்த நபிமொழிகளால் சிந்தனை செல்வாக்கைப் பெற்ற பல செம்மாந்த சீலர்கள், இந்த அருவருப்பை அந்தப் பாதையிலிருந்து அகற்றி சுத்தப்படுத்திட வந்தனர். சுன்னாவை எஃகு கரைகட்டி காத்தார்கள்.

இந்நூலும் அந்தப் பெரும் முயற்சியின் ஓர் அங்கமே. தமிழ் கூறும் நல்லுலகுக்கு இந்த நூலை மொழிபெயர்த்து தந்திருக்கும் வெளியீட்டாளர்களின் நோக்கம் இறைப் பொருத்தத்தை பெறத்தக்கது. பாராட்டுக்குரியது. இது போன்ற நூல்களின் வருகை அறிஞர்களுக்கும் சமுதாயத்துக்கும் இடையில் ஓர் இணைப்பு பாலமாக இருக்க வேண்டுமே அன்றி தடுப்புச் சுவராக அல்ல.
இதை சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் போதுமானவன்.

20/10/2025

நூல்: நானிலத்தின் நன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்).
வெளியீடு: ரஹீமா பதிப்பகம்.
பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.
விலை: 350 ரூபாய்.
தொடர்புக்கு: +918870688698
+91 99444 85587

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருத்துப்போரின் அறிவாயுதம் இந்நூல்.

— மௌலானா இல்யாஸ் ரியாஜி.

முதலாம் உலகப் போர் (1914–1918) உலகநாடுகள் பலவற்றின் வரைபடத்தை மாற்றியமைத்தது. இஸ்லாமிய கிலாஃபத்திலும் அது பெரும் சரிவை ஏற்படுத்தியது. அப்போரின் போது உலக நாடுகள் இரு அணிகளாக நின்றன . பிரிட்டன் மற்றும் சிலுவை போரில் பங்கேற்ற ஐரோப்பிய நாடுகள் நேச நாடுகளின் அணி என்ற ஓர் அணியாகவும் அதற்கு எதிர் அணியில் ஜெர்மனி, இஸ்லாமிய கிலாபத்தை தன் அரசமைப்பாக கொண்ட துருக்கி முதலிய நாடுகள் இருந்தன. இவை மைய நாடுகள் அணி என்றழைக்கப்பட்டன.

“கஃதாயிஃபுல் ஹக்” எனும் நூலில் பேரறிஞர் முஹம்மத் அல்கஸ்ஸாலி மிஸ்ரி(ரஹ்) கூறுகிறார்: “கிலாஃபத் எனும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் உலகத்தில் பொருளாதார ரீதியாகவும் சமயரீதியாகவும் நீண்ட காலமாகவே செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்தது. எனவே சிலுவைப் போர்களை நடத்திய ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகள் அந்த கிலாஃபத்தை அடியோடு வீழ்த்தி அழிக்க வேண்டும் என்று திட்டங்களைத் தீட்டின. முதலாம் உலகப் போருக்கு பிறகு தமது நோக்கத்தை அவை நிறைவேற்றிக் கொண்டன. இதற்காக துருக்கியின் ராணுவ தளபதிகளுள் ஒருவரான முஸ்தபா கமால் என்பவரை தன் கையாளாக ஆக்கி வைத்துக் கொண்டன.”

“இவரைப்பற்றி “சாம்பல் நிற ஓநாய்” என்ற தனது நூலில் ஆம்ஸ்ட்ராங் என்பவர் கூறுகிறார்: ‘தன்னளவில் அவர் ஒரு கிளர்ச்சி மனப்பான்மையுடையவர். மதக்கோட்பாடுகளையோ மரபுகளையோ மனிதனையோ கட்டுப்பாடுகளையோ மதிக்கும் குணமற்றவர்.’ என்று”

“முதலாம் உலகப்போரில் வெற்றிபெற்ற நேச நாடுகள் பதவிப் பித்தரான முஸ்தபா கமாலின் பேராசையை பயன்படுத்திக்கொண்டன. துருக்கியின் ஆட்சியதிகாரத்தில் வந்து அமர்ந்திட வேண்டும் அதற்காக எத்துணை பெரிய துரோகத்தை செய்யவும் தயார் என்ற மனநிலையிலிருந்த முஸ்தபா கமாலைப் பிடித்து அவர்மீது ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சின. “உண்டோ அவரைப்போல் இன்னொருவர்! அவரன்றோ இஸ்லாமிய உலகின் காவலர்! அவரல்லவா வழிகாட்டி! அவரையே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்” என்றெல்லாம் பரப்புரைகள் செய்தன நேச நாடுகள்.”

“நான்கு நிபந்தனைகளை அவருக்கு விதித்து அவரை துருக்கியின் அதிபராக்கின. அவை;
1) இஸ்லாமிய உலகத்துடன் இனி எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

2) குறிப்பாக அரபுகளுடன் அறவே தொடர்பை துண்டித்திட வேண்டும்.

3) கிலாஃபத் என்ற அரசமைப்பை ஒழித்திட வேண்டும்.

4) (இஸ்லாமியச் சாயல் இல்லாத) சமயச் சார்பற்ற அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதன்படி ஆட்சி நடத்த வேண்டும்.”

“இந்த நான்கு நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டு துருக்கியின் அதிபரானார் துரோகத்தின் தளபதியான முஸ்தபா கமால். இஸ்லாத்தின் அரசியல் செல்வாக்கை வீழ்த்திய மேற்குலக நாடுகள் அதன் சமூக செல்வாக்கையும் வீழ்த்திட களம் இறங்கினர். அறிவுப் பரப்பில் அதன் கீர்த்தியையும் மாண்புகளையும் சிதைக்கும் வேலைகளில் இறங்கினர்”.
(நூல்: கஃதாயிஃபுல் ஹக்).

அருள் வேதமாம் திருக்குர்ஆன் மீதும் அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் மீதும் ஐயங்களை கிளப்புகின்ற, புறத்தோற்றத்தில் அறிவுபூர்வமானவை என்று தோன்றுகின்ற கேள்விகள் சிலவற்றை ஐரோப்பிய உலகம் பாரெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. இதன் மூலம் ‘இஸ்லாத்தின் மூலாதாரங்களே ஐயத்திற்கிடமானவை’ என்கிற எண்ண ஓட்டத்தை, ஆங்கில வழிக்கல்வி பயில்கின்ற மாணவர்களிடத்திலும் படித்த பட்டதாரிகளிடத்திலும் விதைக்க முனைந்தது. இந்த காலகட்டத்தில் உலகமெங்குமிருந்த இஸ்லாமியப் பேரறிஞர்கள் இவற்றை எதிர்த்து அறிவாயுதம் ஏந்தினர்.

1925 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமீ தஃலீமி அஞ்சுமன் என்ற கல்விச் சங்கத்தின் ஏற்பாட்டில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இஸ்லாத்தின் மேன்மைகளை அதன் தனிச்சிறப்புகளை பேசுகின்ற நிகழ்வில் உலகப்புகழ் பெற்ற பேரறிஞர் சைய்யித் சுலைமான் நத்வி அவர்கள் ஆற்றிய அறிவார்ந்த உரையின் அழகான மொழிபெயர்ப்பே இந்நூல். இந்தக் கல்விச்சங்கம் சர்வதேச பேரறிஞர் மர்மட்யூக் பிக்தால், கவிக்குயில் அல்லாமா இக்பால் போன்ற பேராளுமைகளையும் சென்னைக்கு அழைத்து வந்து உரையாற்ற வைத்துள்ளது.

இதே காலகட்டங்களில் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவ சமயத்தினரால் அதன் புகழ்மேவிய அறிஞர்கள் அழைத்துவரப்பட்டு கிறிஸ்தவ மதத்தின் கீர்த்தி குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் வழமையாக நடைபெற்று வந்திருக்கின்றன. அவை மக்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக ஆகியும் இருந்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலக்கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாத்தை அதன் சரியான வழியில், நேர்த்தி மிக்க அறிஞர்களின் வழியாக அறிந்து கொள்ளச் செய்யப்பட்ட ஏற்பாடு தான் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிகள். அறிஞர் செய்யத் சுலைமான் நத்வி அவர்கள் ஆற்றியிருக்கின்ற இந்த எட்டு உரைகளும் அவற்றில் அவர் எடுத்து வைக்கக்கூடிய கருத்துகளும் எந்த இலக்கை நோக்கி பார்வையாளர்களை கூட்டிச் செல்கின்றன என்பதை நாம் அவதானித்தால் அக்காலத்தில் அறிவுப் பரப்பில் இஸ்லாத்துக்கு எதிராக நடத்தப்பட்டுக் கொண்டிருந்த கருத்துப் போர்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த உரைத் தொகுப்பிலுள்ள முதல் ஆறு உரைகள், மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கும் அதன் விடுதலைக்கும் உழைத்த மாமனிதர்களுள் முஹம்மது நபி (ஸல்) அவர்களே பின்பற்றத்தக்கவர்கள். நெடுங்கால ஆட்சியாளர்களின் மணிமுடிகளை மண்ணில் உருட்டிய போராளிகளோ வஞ்சக நெஞ்சினரை வீழ்த்தி சரித்த சரித்திர நாயகர்களோ எழுதுகோல் பிடித்து ஏடுகளை நிரப்பிய எழுத்தாளர்களோ பேரண்டத்தில் புதைந்து கிடக்கும் அதிசய மர்மங்களை தன் சொல்லாற்றல் கொண்டு துலங்கிட செய்த சண்டமாருதப் பேச்சாளர்களோ மனித குலத்தின் முன்மாதிரிகள் அல்லர் என்பதை தர்க்க ரீதியாக விளக்குகின்றன.

ஏழாவது உரை, முந்தைய இறைத்தூதர்களின் செய்திகள் ஏன் கலப்படத்திற்கு ஆளாயின, ஏன் இறுதி நபியின் சொற்கள் மாத்திரம் பத்தரை மாற்று தங்கமென தகத்தகாயமாய் மின்னுகின்றன என்பதையும் நம்பிக்கை என்பது சிந்தனையின் அடிமைத்தனம் அல்ல, அதுதான் மெய்யான விடுதலை என்பதையும் விளக்குகிறது. எட்டாவது உரை, ஏகத்துவம் குறித்தும் எந்த வகையான பகுத்தறிவு இறை நம்பிக்கையை மறுதலிக்க வைக்கிறது என்பது குறித்தும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் என்ற நம்பிக்கை எப்படி சீர்கேட்டுக்கு காரணமாக அமைகிறது என்பதையும் விளக்குகிறது.

‘இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இம்மண்ணுலகை விட்டு மறைந்து 90 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அன்னாரின் பொன்மொழிகளை எழுதி வைத்து பாதுகாக்கும் பணியும் அவற்றை நூலாக தொகுக்கும் பணியும் தொடங்கிற்று’ என்ற தகவலை வைத்துக் கொண்டு நபிமொழிகளின் மீதும் அவற்றின் நம்பகத்தன்மையின் மீதும் ஐயத்தை ஏற்படுத்திட சில கீழைத்தைய அறிஞர்களும் கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் சிலரும் முயன்றதற்கு மௌலானா செய்யித் சுலைமான் நத்வி அவர்கள் மறுப்புரையாக கூறியிருக்கும் தகவல்கள் மௌலானாவின் அற்புதமான அறிவுப் புலமைக்கும் பிரமிப்பூட்டும் ஞானச் செழுமைக்கும் சான்றாக அமைகின்றன. ‘ஹதீஸ்கலை வல்லுனர்களே ஏராளமான ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானவை அல்ல என்று கூறி இருப்பதால் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறுவது எவ்வளவு அபத்தமானது என்பதை நத்வி அவர்கள் விளக்கி இருப்பதை, “ளயீஃபான ஹதீஸ்களை ஏற்க மாட்டோம்” என்று கூறுகின்ற சகோதரர்களும் அவசியம் வாசிக்க வேண்டும்.

#நூலாய்வுரை.

நவீன உலகின் விஞ்ஞான பாய்ச்சலுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம்.இம்மார்க்கத்தின் மூலாதார வேத நூ...
19/10/2025

நவீன உலகின் விஞ்ஞான பாய்ச்சலுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம்.

இம்மார்க்கத்தின் மூலாதார வேத நூல் இறைவேதமாம் திருக்குர்ஆன்.

இவ்வேதத்தின் விளக்கமாக, நடமாடும் விரிவுரையாக வாழ்ந்தவர்கள் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியன ஹதீஸ் என்றறியப்படுகின்றன.

காலத்தை வென்று வாழும் திருக்குர்ஆனுக்கு பல விரிவுரைகள் காலத்திற்கேற்ப வந்திருப்பினும்கூட அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வே குர்ஆனின் ஒப்பற்ற விரிவுரையாகத் திகழ்கிறது.

கால ஓட்டத்திற்கு ஏற்ப நவீன விளக்கங்களை வெளிப்படுத்தி வருகின்ற அருள்மறையாம் திருக்குர்ஆனுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் குறிப்புரையும் தந்த அறிஞர் யூசுப் அலி அவர்கள் கூறுகிறார் “குர்ஆனின் சிறந்த விரிவுரை காலம் தான்” என்று.

ஒருவகையில் இது உண்மைதான் என்றிருப்பினும் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைவிட இன்னொன்று சிறந்த விளக்கமாக இருந்திட இயலாது என்பதே இஸ்லாமிய அறிவுலகம் அடித்துச் சொல்லும் உண்மை.

எனவேதான் ஹதீஸ்களுக்கு சேவையாற்றிட, அவற்றை ஊடுருவல்கள் கலப்படங்கள் திரிபுகள் ஆகியனவற்றிலிருந்து காத்திட ஒவ்வொரு காலத்திலும் அருஞ்சேவை ஆற்றி வருகின்றனர் இஸ்லாமிய பேரறிஞர்கள்.

இச்சேவையில் தன்னையே உருக்கி ஊற்றியவர்கள் ஏராளம்.

இந்நூலாசிரியரும் இத்துறையில் தனது வகிபாகத்தை சரியாக நிறைவேற்றியுள்ளார். அவரின் நோக்கமும் அதுவே.

அதை இந்நூலின் முன்னுரையில் முதல் பாராவிலேயே தெள்ளத்தெளிவாக சொல்லிவிடுகின்றார். “ஸஹீஹ் மற்றும் ஹசன் தரத்திலான நபிமொழிகளையெல்லாம் மீளக் கூறாமல் ஒரே தொகுப்பாக திரட்டி தர வேண்டும் என்பதே நோக்கம்” என்று கூறுகிறார்.

இந்நூலை வாசிக்கும் போது அவர் அந்த நோக்கத்தை மிகத் துல்லியமாக சரியாக அடைந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இதற்காக அவர் பெரும் சிரத்தையும் மெனக்கிடலும் செய்திருக்கிறார்.

இந்நூலுக்கு அவர் சூட்டியிருக்கும் துணைப் பெயர் “ஜாமிவுல் மஸானீதி வஸ்ஸுனனில் ஹாதீ லி அக்வமி சுனன்” என்பது. இதன் பொருள்: “நேர்த்திமிக்க நபிவழிகளுக்கு வழிகாட்டும் முஸ்னது மற்றும் சுனன் நூல்களின் தொகுப்பு”.

சுன்னா என்ற சொல்லுக்கு நேர்த்தியான வழி என்பதே பொருள். அப்படி இருக்க மிக நேர்த்தியான சுன்னாவின் தொகுப்பு என்று இந்நூலுக்கு அவர் துணைப் பெயர் சூட்டி இருப்பதன் காரணம் என்னவெனில், “சுன்னா” என்ற நேர்த்திமிக்க பாதையில், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட உண்மைக்கு புறம்பான சில தகவல்களும் கலந்திருப்பதை களைந்து சுன்னாவை நேர்த்தி மிக்க அதன் இயல்புக்கு இந்நூல் கொண்டு செல்வதால் இந்த துணைப் பெயர் பொருத்தமானது தான்.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய சுன்னா என்ற பாதை நடக்க எளிதானது, கரடுமுரடானதல்ல. தூய்மையானது, குப்பை கூளங்களற்றது. நேரானது, கரடு முரடற்றது.

ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலேயே அந்தப் பாதையில் விரும்பத் தகாத சேதங்களை ஏற்படுத்த சிலர் முயன்றனர். அதன் செம்மையை சீர்குலைக்க நினைத்தனர். அந்தப் பாதையில் மனிதக் கருத்து எனும் கழிவுகளை அள்ளிப் போட முயன்றனர். இவ்வாறு சுன்னாவை களங்கப்படுத்த முனைவோரின் புகலிடம் நரகமே என்று எச்சரிக்கின்றன நபிமொழிகள்.

அந்த நபிமொழிகளால் சிந்தனை செல்வாக்கைப் பெற்ற பல செம்மாந்த சீலர்கள், இந்த அருவருப்பை அந்தப் பாதையிலிருந்து அகற்றி சுத்தப்படுத்திட வந்தனர். சுன்னாவை எஃகு கரைகட்டி காத்தார்கள்.

இந்நூலும் அந்தப் பெரும் முயற்சியின் ஓர் அங்கமே. தமிழ் கூறும் நல்லுலகுக்கு இந்த நூலை மொழிபெயர்த்து தந்திருக்கும் வெளியீட்டாளர்களின் நோக்கம் இறைப் பொருத்தத்தை பெறத்தக்கது. பாராட்டுக்குரியது. இது போன்ற நூல்களின் வருகை அறிஞர்களுக்கும் சமுதாயத்துக்கும் இடையில் ஓர் இணைப்பு பாலமாக இருக்க வேண்டுமே அன்றி தடுப்புச் சுவராக அல்ல.
இதை சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- மௌலானா, கே.எம். இல்யாஸ் ரியாஜி
தலைமை இமாம், ஈத்கா மஸ்ஜித்,
மந்தைவெளி, சென்னை.

நூல் வெளியீடு:-
ரஹீமா பதிப்பகம்
பரங்கிப்பேட்டை

நூல் கிடைக்குமிடம்:-
Rahmath Book House
Rahmath Publications - ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ்
மண்ணடி, சென்னை.
தொடர்புக்கு:-
+91 91718 46184
+91 096001 25000

#ஸஹீஹுல்_குதுபித்_திஸ்ஆ_வஸவாயிதுஹு #பூமான்_நபியின்_பொன்மொழிகள் #ரஹ்மத் #ரஹீமா_பதிப்பகம்

18/10/2025
பூமான் நபியின் பொன்மொழிக் களஞ்சியம் ஸஹீஹுல் குதுபித்திஸ்ஆ வஸவாயிதுஹு(முதல் பாகம்)(முக்கியமான 34 நூல்களிலிருந்து திரட்டப்...
17/10/2025

பூமான் நபியின் பொன்மொழிக் களஞ்சியம்

ஸஹீஹுல் குதுபித்திஸ்ஆ வஸவாயிதுஹு
(முதல் பாகம்)

(முக்கியமான 34 நூல்களிலிருந்து திரட்டப்பட்ட உயிரோட்டமிக்க ஆதாரபூர்வமான நபிமொழிகளின் பெருந்தொகுப்பு)

மிலேனியத்தில் (ஆயிரம் ஆண்டுகளில்) ஹதீஸ் துறையில் வெளிவந்த அதிசிறந்த ஒரு நூலாக இதனைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.

நபி (ஸல்) அவர்களின் மிகப் பெரும்பான்மையான ஹதீஸ்களை ஒரே தொகுப்பில் பார்க்கும் அரிய வாய்ப்பு வாசகர்களுக்கு இதன் மூலம் கிட்டுகின்றது.

இந்த வகையில் இரு ஒரு சாதாரண ஹதீஸ் தொகுப்பல்ல. மாறாக, இதுவொரு ஹதீஸ் கலைக் களஞ்சியமாகும்.

இந்த ஹதீஸ் தொகுப்பு ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியவொன்றாகும். அறிஞர்கள், அழைப்பாளர்கள் உட்பட எல்லோருக்கும் பயன்படக்கூடிய மிகப் பெரிய அறிவுக் கருவூலமாக இதனை வர்ணித்தால் அது மிகையாகாது.

- அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
முதல்வர், ஜாமிஆ நளீமிய்யா கலாசாலை, இலங்கை

#ஸஹீஹுல்_குதுபித்_திஸ்ஆ_வஸவாயிதுஹு #பூமான்_நபியின்_பொன்மொழிகள்

Address

35/16, Angappan Naicken Street
Chennai
600001

Opening Hours

Monday 10:30am - 7pm
Tuesday 10:30am - 7pm
Wednesday 10:30am - 7pm
Thursday 10:30am - 7pm
Friday 10:30am - 7:30pm
Saturday 10:30am - 7:30pm

Telephone

+919600125000

Alerts

Be the first to know and let us send you an email when Rahmath Book House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahmath Book House:

Share

Category