17/06/2025
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் தற்போது அறிக்கை ஒன்று வெளியீட்டுள்ளது.. அதில் உள்ள 22 தீர்மானங்களை காண்போம்...
1. மாநில,மாவட்ட கபடி கழகத்தில் முறையாக பதிவு செய்து போட்டிகளை நடத்த வேண்டும்.
2. வீரர்,வீராங்கனைகளை தாய்,சேய் என இரண்டு அணிகளில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேண்டும். வேறு அணிகளில் கண்டிப்பாக விளையாட அனுமதிக்க கிடையாது.
3. கால நேரங்களை குறிப்பிட்டு, முதல் நாள் போட்டியை மாலை 5 மணி முதல் இரவு 12 மணி மணிக்குள், இரண்டாம் நாள் காலை 8 மணி முதல் இரவு 10 மணிக்குள் இறுதி போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.
4. கண்டிப்பாக Setting அணிகளை விளையாட அனுமதி வழங்க கூடாது.
5. மாநில நடுவர்கள்,விழா கமிட்டியினர் இணைந்து Fixture கால அட்டவணை போட வேண்டும்.
6. போட்டி நடத்துபவர்கள் கண்டிப்பாக அவர்களுது பெயரில் Setting அணிகளை வைத்து விளையாடுவதற்கு அனுமதிக்க கூடாது.
7. கண்டிப்பாக எடை பிரிவு போட்டியாக இருந்தால் எடை பிரிவு போட்டியாகவும் மற்றும் எடைபிரிவு (Open match) இல்லதா போட்டியாக இருந்தால் open match போட்டியாக மட்டுமே நடத்த வேண்டும்.மாநில கபடி கழகத்தில் பதிவு பெற்று பின்பு, எடைபிரிவுகளை மாற்றக் கூடாது.
8. போட்டிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் மாவட்ட போட்டி என்றால் 2 தினங்களில் 2 மைதானம் அமைத்து 40 அணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கி போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும்.
9. மாநில போட்டிகளாக இருந்தால் ஆண்கள் 16 அணிகளையும்,பெண்கள் 16 அணிகளையும் அமைத்து போட்டிகளை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும்.
10. போட்டி நடத்துபவர்கள் கண்டிப்பாக முன் கூட்டியே அணிகளுக்கு அழைப்பு விடுத்து,பதிவு செய்யும் அணிகளுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கி போட்டிகள் நடத்த வேண்டும்.
11. குறைந்த அணிகளை அழைத்து League cm knockout சிறப்பானமுறையில் நடத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
12. பங்கு பெறும் அணிகளுக்கு சிறப்பான முறையில் உணவு, தங்குமிடம் வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
13. போட்டி நடத்துவபர்கள் கண்டிப்பாக மருத்துவ குழு (Medical Team) அமைத்து போட்டி நடத்த வேண்டும்.
14. போட்டியில் பங்குபெறும் அணிகளுக்கு அவர்கள் வரும் Bus, Train அடிப்படையில் பயணப்படி வழங்க வேண்டும்.
15. எக்காரணத்தை கொண்டும் போட்டி நடத்துபவர்கள் தங்களது அணி வெற்றி பெறும் வகையில் Fixture அமைத்து போட்டிகளை நடத்த கூடாது.
16. Knockout போட்டியாக இருந்தால் 16 அணிகளை குலுக்கல் முறையில் கால அட்டவணை அமைத்து போட்டிகளை நடத்தலாம்.
17. எந்த அணிகளாக இருந்தாலும் போட்டி நடத்துபவர்கள் ஒருதலை பட்சம் பார்க்காமல்,சுயநலம் இல்லாமல் பொதுநலம் கருதி போட்டிகளை நடத்த வேண்டும்.
18. போட்டிகளில் பங்கு பெறும் பெண்கள் அணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவர்களுக்கு உரிய தங்குமிடம் வழங்கிட வேண்டும்.
19. பெண்கள் அணி பங்கேற்கும் போட்டிகளில் அவர்கள் தங்கும் இடத்தில், ஆண்கள் பயிற்சியாளர்கள்,மேலாளர்களுக்கு இடம் ஒதுக்க கூடாது.
20. காலதாமதமாக வரும் அணிகளுக்கு விளையாட வாய்ப்புகள் வழங்க கூடாது. போட்டி நடத்துவபர்கள் குறித்த நேரத்தில் வரும் அணிகளை வைத்தே போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும்.
21. நிறுவன அணிகளில் இரண்டு அல்லது மூன்று Guest player விளையாட அனுமதிக்கும் பொழுது, அந்த இரண்டு அல்லது மூன்று வீரர்களை ஒரு வருடத்திற்க்கு நிறுவன அணிகளில் விளையாட (Department or TNAKA) அனுமதி பெற்று இருக்க வேண்டும்.ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றி விளையாடுவதற்கு அனுமதிக்க கூடாது.
22.அகில இந்திய,மாநில கபடி கழகத்தின் விதிமுறைகளை பின்பற்றி தான் போட்டிகளை நடத்த வேண்டும்.ப்ரோ கபடி விதிமுறைகளை வைத்து போட்டிகளை நடத்த கூடாது.